செய்திகள்

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34% இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Makkal Kural Official

பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு

வாஷிங்டன், ஏப். 3–

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர இறக்குமதி வரிக்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்தியவில் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிகளை விதித்தும், அதேபோல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு வரிகளை விதித்து அறிவித்துள்ளார். ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வருகிற 4 ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

சுமார் 25 நாடுகளின் மீது பரஸ்பர வரியை அதிபர் டிரம்ப் விதித்துள்ளது. அவை குறித்த விவரம் வருமாறு:–

மடாகஸ்கர் – 93%, மியாமனர் – 88%, செர்பியா – 74%, துனீஷிய – 55%, கஜகஸ்தான் – 54%, கம்போடியா – 49%, வியட்நாம் – 46%, இலங்கை – 44%

ஜோர்டான் – 40%, வங்கதேசம் – 37%, நிகரகுவா – 36%, தைவான் – 32%, இந்தோனோஷியா – 32%, சுவிட்சர்லாந்து – 31%, தென்ஆப்ரிக்கா – 30%, நார்வே – 30%, பாகிஸ்தான் – 29%, இந்தியா – 26%, தாய்லாந்து – 26%, தென்கொரியா – 25%,

ஜப்பான் – 24%, மலேஷியா – 24%, நியூசிலாந்து – 20%, இஸ்ரேல் – 17%, பிலிப்பைன்ஸ் – 17%, கோஸ்டாரிகா – 17%, ஈகுவாடர் – 12%

பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், சிலி, ஆஸ்திரேலியா, துருக்கி, கொலம்பியா, பெரு, டொமினிக் குடியரசு, யு.ஏ.இ., அர்ஜென்டினா, கவுதமாலா, ஹோண்டுரஸ், எகிப்து, சவுதி அரேபியா-, எல்சல்வாடார் மீது 10% வரி விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின்

பொற்காலம்

இது குறித்து ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் அறிவித்துள்ளதாவது,

“இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். இந்த நாள் அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரஸ்பர வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனடா கடும் கண்டனம்

அதிபர் டிரம்ப் வரி விதிப்பிற்கு எதிராக போராடுவோம். எக்கு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான இறக்குமதி வரி, கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரி விதிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வர்த்தகப் போரை எதிர்த்து போராட தயாராகி விட்டோம். நாங்கள் எதையும் சமாளிப்போம் என்று கூறியுள்ளார்.

ஸ்பெயின் பிரதமர், பெட்ரோ சான்செஸ், எங்கள் நாடு தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தும். தொழிலாளர்களை பாதுகாக்கும். உலகத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

சுவீடன் பிரதமர், உல்ப் கிறிஸ்டர்சன் கூறுகையில், நாங்கள் ஒரு வர்த்தகப் போரை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எங்கள் நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை

ஐரிஷ் வர்த்தக அமைச்சர், சைமன் ஹாரிஸ், அயர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தையே எப்போதும் முன்னோக்கி செல்வதற்கான வழியாகும் என்று கூறியுள்ளார்.

இத்தாலி பிரதமர் மெலோனி, வர்த்தக போரை தவிர்க்க வேண்டும். அதிபர் டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம். அமெரிக்காவுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வர்த்தகப் போரைத் தவிர்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், இது ஒரு நண்பரின் செயல் அல்ல. தனது நாடு பதில் வரி விதித்து பழிவாங்காது. ஆஸ்திரேலியா அமெரிக்க பொருட்கள் இறக்குமதிகளுக்கு எந்த வரியும் வசூலிக்கவில்லை. இந்த வரிகள் எதிர்பாராதவை அல்ல. ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன். அவை முற்றிலும் தேவையற்றவை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் வலிமையான ராணுவ நட்பு நாடாக இருந்து வருகிறது. எங்கள் அரசாங்கம் எப்போதும் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *