வாஷிங்டன், ஆக. 12–
இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிய தன் விளைவாக இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி ரஷ்யாவையும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரஷ்யா மீண்டும் தங்கள் நாட்டைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். ஆனாலும், அந்த நாடு சிறப்பாகச் செயல்பட மிகப்பெரிய ஆற்றல் வளத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது ரஷ்ய பொருளாதாரம் சிறப்பாக இல்லை. இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா ஒரு மிகப்பெரிய நாடு. அங்கு 11 விதமான நேர அமைப்புகள் உள்ளன. உங்களால் நம்ப முடிகிறதா. நிலத்தின் அடிப்படையில் பார்த்தால் ரஷ்யா மிகப்பெரிய நாடுதான் எனத் தெரிவித்தார்.
![]()





