செய்திகள்

இந்தியாவில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி, பிப். 4–

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1792 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,745 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44,150,713 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 56 லட்சத்து 9,051 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,65,769 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *