புதுடெல்லி, மே 9–
இந்தியாவில் 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய விட குறைவாகும். நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 5 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 410 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 56 ஆயிரத்து 905 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 34 லட்சத்து 90 ஆயிரத்து 396 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 72 லட்சத்து 6 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 79 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 322 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 76 ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.