செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 801 பேருக்கு கொரோனா: 8 பேர் பலி

டெல்லி, மே 15–

இந்தியாவில் நேற்று 1,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 801 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,80,674-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,493 ஆக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 பேர் பலி

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் 4 பேரும், பஞ்சாப், உத்தரபிரதேசம், மிசோரம், மேற்குவங்கத்தில் தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை, 5,31,770 லிருந்து 5,31,778-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை மொத்தம் 4,44,35,204 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று இந்திய குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *