டெல்லி, டிச. 10–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் 4047
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,047 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,654 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,39,948 ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 219 கோடியே 96 லட்சத்து 68,305 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 49,718 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.