செய்திகள்

இந்தியாவில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி, பிப். 17–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 126 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1835 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,757 பேர் ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,039 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 63 லட்சத்து 26,910 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,513 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *