டெல்லி, ஜூலை 3–
இந்தியாவில் புதிதாக 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1475 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,94,325 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1475 ஆக உள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்திலும் உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,908 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,44,60,942 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.