செய்திகள்

இந்தியாவில் புதிதாக 140 பேருக்கு கொரோனா

டெல்லி, பிப். 27–

இந்தியாவில் புதிதாக 140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2257 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,771ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 53,343 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 63 லட்சத்து 87,889 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,976 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *