புதுடெல்லி, மார்ச் 21–
இந்தியாவில் புதிதாக 1 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 761 ஐ விட குறைவாகும்.
இதுவரை நாட்டில் கொரோனாவால் 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 பேர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 652 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 16 ஆயிரத்து 510 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 303 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 76 லட்சத்து 66 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 40 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்து 296 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் இதுவரை 61 லட்சத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர்.