திருவனந்தபுரம், டிச. 03–
கேரள மாநிலம், ஆலப்புழாவில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்கள் 7 பேர் சென்ற கார், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து மீது மோதியது. நள்ளிரவு 10 .30 மணியளவில் களக்கோடு அருகே நடந்த இந்த வாகன மோதலில் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் அறிந்து மீட்க வந்தவர்கள், காரை உடைத்து மாணவர்களை வெளியே எடுத்தனர்.
இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். காரில் மொத்தம் 7 பேர் இருந்த நிலையில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்தை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 மாணவர்கள் பலி
இது குறித்து காவல் துறை நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஆலப்புழாவில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் லட்சத்தீவைச் சேர்ந்த தேவானந்தன், முகமது இப்ராகிம், ஆயுஷ் ஷாஜி, ஸ்ரீதீப் வல்சன் மற்றும் முஹம்மது ஜப்பார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காரில் சிக்கிய மாணவர்களை மீட்க மீட்புக் குழுவினர் மெட்டல் கட்டர்களை பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
கார் மற்றும் பேருந்தில் படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சும் சேதமடைந்தது, ஆனால் பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயம் அடைந்தனர். கனமழை காரணமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.