வாஷிங்டன், டிச.18–
ஐ.நா. சபையில் ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்களும், மியான்மருக்கு ராணுவ ஆட்சியாளர்களும் பிரதிநிதித்துவம் அளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை 193 உறுப்பு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. சபை ஏக மனதாக நிறைவேற்றியது.
இதையடுத்து, ஐ.நா.வில் மியான்மருக்கு முந்தைய ஆங் சான் சூகி அரசால் நியமிக்கப்பட்டவரும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய அஷ்ரப் கனி அரசால் நியமிக்கப்பட்டவருமே தொடர்ந்து தூதர்களாக செயல்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மியான்மரில் தோ்தல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது. இதனை சர்வதேச நாடுகள் கண்டித்தன.
அமெரிக்கா வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.