செய்திகள்

அவிநாசி அருகே தம்பதி படுகொலை

Makkal Kural Official

திருப்பூர், மார்ச் 13–

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விவசாயத் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம்(75). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த பக்கத்து தோட்டத்துக்காரர் சென்று பார்த்த போது, தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா அல்லது தங்க நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி பாளையம் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 நாட்களைக் கடந்தும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது அவிநாசி அருகே இந்த படுகொலை சம்பவம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. கிரியாஸ் யாதவ் வந்து விசாரணையை துரிதப்படுத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *