செய்திகள்

அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தடை: ராகுலுக்கு விருந்தளித்து மகிழ்ந்த லாலு

டெல்லி, ஆக. 5–

ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்த நிலையில் அவருக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் விருந்தளித்து மகிழ்ந்தார்.

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனைக்கு நேற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த மகிழ்வைக் கொண்டாட ராகுல் காந்திக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு விருந்தளித்தார். விருந்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மலர் பூங்கொத்து கொடுத்து கட்டி அணைத்து லாலு வரவேற்றார்.

ஆட்டிறைச்சி விருந்து

இந்த விருந்தில் பிகாரின் புகழ்பெற்ற மேற்கு சம்பாரன் பகுதியின் ஆட்டிறைச்சியின் சிறப்பு உணவு பறிமாறப்பட்டது. இதற்கு அந்த ஆட்டிறைச்சியை பிகாரிலிருந்து விமானத்தில் லாலு வரவழைத்திருந்தார். இந்த விருந்தில் லாலுவின் இளைய மகனும் பீகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் கலந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’வின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள சூழலில் ராகுலுக்கு கிடைத்த நீதிமன்ற தடை, மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, நேற்று லாலுவுடன் கொண்டாடினார் ராகுல். இந்த விருந்துக்குப் பின் அனைவரும் அரசியல் ஆலோசனை நடத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *