செய்திகள்

அம்பேத்கர் நினைவு நாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

Makkal Kural Official

சென்னை, டிச. 6–

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

“கற்பி – புரட்சி செய் – ஒன்றுசேர்” பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் – கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்!

கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்!

தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி – நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *