சென்னை, பிப்.14-
தமிழக அமைச்சரவையில் நேற்று இலாகா மாற்றம் நடந்துள்ளது. இதுகுறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சரின் பரிந்துரைப்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வகித்து வந்த ‘காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்’ என்ற இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி, இனிமேல் பொன்முடி, வனம் மற்றும் காதித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.