செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம்: பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு

Makkal Kural Official

சென்னை, பிப்.14-

தமிழக அமைச்சரவையில் நேற்று இலாகா மாற்றம் நடந்துள்ளது. இதுகுறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சரின் பரிந்துரைப்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வகித்து வந்த ‘காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்’ என்ற இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்படி, இனிமேல் பொன்முடி, வனம் மற்றும் காதித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *