செய்திகள்

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக பனிப்போர்

Makkal Kural Official

நியூசிலாந்து, பிப். 17–

சீன பொருட்கள் மீதான அதீத இறக்குமதி வரியால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். அவரது ஆட்சி அமைந்த பிறகு உலக நாடுகள் அச்சம் அடைந்து உள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள்தான். ஆமாம், டிரம்ப் தன்னை எதிர்க்கும் உலக நாடுகளை சிதறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கி உள்ளார். இதில் இந்தியாவுக்கும் விதிவிலக்கு கிடையாது.

இந்தியா மீது வரி விதிப்பது, அமெரிக்க வாழ் சட்டவிரோத இந்தியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் டிரம்பின் அதிரடி லிஸ்டில் உள்ளன. இதேபோல் டிரம்பின் பார்வை, பனாமா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீதும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பால் சீன நிறுவனங்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

அமெரிக்கா அடாவடி

உலக நாடுகளில் மிகவும் சக்தி கொண்ட சீனா, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு அடைய முயற்சித்து வருகிறது. கடுமையான போட்டிகளை கண்டாலும் முன்னிலை பெற்று தான் உள்ளது. எனினும் அண்மை காலங்களில் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீன பொருள்கள் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளது. இது சீன நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ளனர். இதனால் சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்கிறது. இதற்கிடையே சீனா பொருட்களின் இறக்குமதி அமெரிக்காவில் பெருமளவில் உள்ள நிலையில் வரி விதிக்கப்பட்டது.

இது தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது. ஆனால் இதே நிலை நீடித்தால் சீனாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என்றே கூறலாம். அமெரிக்காவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 400 பில்லியன் டாலர் அளவுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பால், சீனாவின் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க உள்ளன. இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பனிப்போர் தொடங்கிவிட்டது போன்ற சூழல் காணப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *