செய்திகள்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னை, ஜூலை 13–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து 44 ஆயிரத்து 296-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டில் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்றம் இறக்கத்தில் தங்கத்தின் விலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து 44 ஆயிரம் 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை 2.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *