சென்னை, ஜன. 31–
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில்,
“அண்ணாவின் 56வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருனாளர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பிப்ரவரி 3–ந்தேதி, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.