ஒசூர், செப். 11
ஓசூரில் அண்ணா தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது யார் என்பதில் தி.மு.க. – – அண்ணா தி.மு.க. இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டார்.
கே.பி. முனுசாமியின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்களும் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் திமுகவினரும் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.