செய்திகள்

ஓசூரில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல்

Makkal Kural Official

ஒசூர், செப். 11

ஓசூரில் அண்ணா தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது யார் என்பதில் தி.மு.க. – – அண்ணா தி.மு.க. இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டார்.

கே.பி. முனுசாமியின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்களும் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் திமுகவினரும் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *