செய்திகள் வாழ்வியல்

அணுப்பிணைவு மின்சாரம் சக்தி உற்பத்தி செய்வது எப்படி ?


அறிவியல் அறிவோம்


அணுப்பிளவு மின்சாரம் சக்தி உற்பத்தி செய்யும் போது ஏற்படும் பாதிப்புகள் இல்லாதது அணுப்பிணைவு மின்சாரம் சக்தி உற்பத்தி செய்யும் ஆராய்ச்சித் திட்டம்.

அணுப்பிணைவு மின்சாரம் சக்தி உற்பத்தி செய்வது எப்படி ? என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஆஸ்டிரியா நாட்டின்வியன்னா நகரில் இருக்கும் உலக நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாவாகக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஐரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *