சென்னை, மே 8–
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ‘‘ரெட்ரோ’’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, ‘‘அகரம்’’ அறக்கட்டளைக்கு (நலிந்த ஏழை மாணவ – மாணவிகளின் கல்விக்கு உதவும் தொண்டு நிறுவனம்) சூர்யா வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள்.