கருணை- ராஜா செல்லமுத்து
உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் ஒரு மத்தியான வேளையில் கரணும் முத்துவும் சாப்பிடக் கிளம்பினார்கள். அது மதிய உணவு வேலையை சற்றுக் கடந்திருந்த நேரம். வேலையை முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது மதிய உணவு இடைவெளியை கொஞ்சம் தாண்டி நின்றது. சுகாதாரமற்ற உணவு விடுதிகளில் அந்த நேரத்தில் சாப்பிடுவது சரியல்ல என்பதை நினைத்துக் கொண்ட இருவரும் நல்ல கடையை தேடி அலைந்தார்கள். மணி மூன்றைத் தொடும் நேரம் என்பதால் நிறைய கடைகளில் மதிய உணவு முடிந்திருந்தது. […]