சிறுகதை

நிழல் -ராஜா செல்லமுத்து

முந்தைய வருடங்களை விட இந்த வருடத்தில் வெயில் அதிகமாகவே இருந்தது. ஓசோன் படலத்தைப் பிய்த்துக் கொண்டு சூரிய ஒளி பூமியில் சறுக்கி விழுந்தது போல வெப்பம் வீதி எங்கும் தெப்பம் கட்டி நிறைந்திருந்தது வீதியில் நடக்கும் மனிதர்களின் வரத்து குறைந்திருந்தது இதுவரை அப்படி ஒரு உஷ்ணத்தை கண்டதில்லை என்று மனிதர்கள் எல்லாம் புலம்பித் தவித்தார்கள்.வசதி படைத்தவர்கள் குளிர்சாதன அறைக்குள் முடங்கி கிடந்தார்கள். வசதியற்றவர்கள் மர நிழல், கூரை வீடுகள், தண்ணீர் தடங்கள் என்று ஒதுங்கி நின்று வெப்பத்தைப் […]

Loading

சிறுகதை

விளிம்பு நிலை மனிதர்கள் …! – ராஜா செல்லமுத்து

அலுவலகம் செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலைக் கடந்து செல்வான் மோகன். அப்படிக் கோவிலைக் கடக்கும் போதெல்லாம் அவன் சாமி கும்பிடத் தவறுவதில்லை. சாமி கும்பிட்டு மனதிற்குள் நிறைவாக அந்த வழியாக வரும்போது அவனை ஒரு சம்பவம் தினந்தோறும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஏன் இவர்கள் இந்த வீதியில் வசிக்க வேண்டும் ?அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வளவு வயதாகாத அந்தப் பெண்மணி. நல்ல தோற்றமுடைய அந்த ஆண் மகன். இப்படி இருக்கும் இவர்களால் வாடகைக்கு ஒரு வீடு […]

Loading

சிறுகதை

கருணை- ராஜா செல்லமுத்து

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் ஒரு மத்தியான வேளையில் கரணும் முத்துவும் சாப்பிடக் கிளம்பினார்கள். அது மதிய உணவு வேலையை சற்றுக் கடந்திருந்த நேரம். வேலையை முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்த போது மதிய உணவு இடைவெளியை கொஞ்சம் தாண்டி நின்றது. சுகாதாரமற்ற உணவு விடுதிகளில் அந்த நேரத்தில் சாப்பிடுவது சரியல்ல என்பதை நினைத்துக் கொண்ட இருவரும் நல்ல கடையை தேடி அலைந்தார்கள். மணி மூன்றைத் தொடும் நேரம் என்பதால் நிறைய கடைகளில் மதிய உணவு முடிந்திருந்தது. […]

Loading

சிறுகதை

அவர் எழுதியது – மு.வெ. சம்பத்

ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றியது. இவர்கள் பெரும்பாலும் விழாக்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள். இவர்கள் அடிக்கடி செல்வது காஞ்சீபுரம் மட்டுமே. மகா பெரியவாளைச் சந்தித்து வந்தால் மன சாந்தி கிடைப்பதாக உணர்ந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெரியவா சொல்லுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வார் மனதில். இவர்களுக்கு இது தவிர வாழ்வில் ஒரே பிடிமானம் ரவி தான். அவன் இவர் தம்பி பையன். ரவி வந்தால் வீடே கலகலவென மாறி விடும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் […]

Loading

சிறுகதை

அலட்சியம் – ராஜா செல்லமுத்து

… நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி அமலாவை அந்த உணவு விடுதிக்குக் கூப்பிட்டு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டிருந்தான் சங்கர். அவ்வளவு பெரிய உணவு விடுதி இல்லை என்றாலும் அவர்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் நல்ல உணவு விடுதி இது என்பதால் அங்கே சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று வந்த சங்கருக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. சிறிய இடம் . வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு பக்கமும் டேபிள்கள் போடப்பட்ட இருக்களகள் […]

Loading

சிறுகதை

சித்து விளையாட்டு – ராஜா செல்லமுத்து

அன்று முழுநிலா வானில் முழுமையாக வளர்ந்து நின்றிருந்தது. சோலார் பவரைப் போல பூமியில் வெளிச்சம் தந்தது. நிறைந்த அந்தப் பௌர்ணமி திருநாளில் சுருளி சித்தர் வீற்றிருக்கும் சுருளி மலைக் குடியிருப்புக்கு சென்றார்கள் ஆனந்தும் முத்துவும். அந்த இடம் முழுவதும் தெய்வீகம் கமழும் இடமாக இருந்தது. ஜவ்வாதும் பன்னீரும் கமகமவென்று மணம் வீசியது. திருநீறு வாசம் அந்தத் திசையெல்லாம் வீசியது . ஆனந்தும் முத்துவும் சித்தருக்குத் தேவையான விசயங்களை வாங்கிக் கொண்டார்கள். “புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடானது […]

Loading

சிறுகதை

காதலிக்க தடையில்லை : ஆர். வசந்தா

சிவபுரி என்ற சிறிய நாட்டை நன்மாறன் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். நாடு வளத்தோடும் செழுமையோடும் கல்வி அறிவோடும் சிறந்து விளங்கியது. அந்த மன்னனுக்கு சுந்தரவல்லி என்ற மகள் இருந்தாள். அவள் நல்ல அழகி. அறிவுக் கூர்மையும் மிக்கவள். நன்மாறனுக்கு தன் மகளை எல்லாத் துறையிலும் பயிற்றுவித்து அவளைப் பெரிய சகலகலாவல்லியாக்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதன்படியே அவளும் திறம்பட நடந்து வந்தாள். குழந்தைப் பருவத்தைக் கடந்து மங்கைப் பருவம் வந்தாள். நன்மாறனும் […]

Loading

சிறுகதை

ஜீவகாருண்யம் – ராஜா செல்லமுத்து

‘அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும். கரண் எவ்வளவோ சமாதானமாகப் போய்க் கொண்டு தான் இருந்தான். ஆனால்,அன்று அவனுக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாகவே வந்தது. ” என்ன மனிதர்கள் இவர்கள் . எல்லாம் கடவுளை கும்பிடுகிறேன்.கடவுளுடன் நேரடியா பேசுறேன் என்று கூட சொல்கிறார்கள். ஆனால் இரக்கம் கொஞ்சம் கூட இல்லையே? ஒரு சின்ன உயிர் வாழ்வதற்கு கூட சம்மதிக்காக இந்த மனிதர்களால் எப்படி இன்னொரு மனிதன் மீது இரக்கம் காட்ட முடியும்? கோயில்களுக்கும் […]

Loading

சிறுகதை

பரஸ்பரம் – மு.வெ. சம்பத்

பத்மா– ராகவன் திருமணம் முடிந்து இன்றோடு பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இவர்களுடன் ராகவனின் தம்பி கண்ணன் தங்கி உள்ளார். அவர் தற்போது ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராகவன் மற்றும் கண்ணனுக்கு பத்மா தான் உதவி. கண்ணனை தனது மகன் போல் பாவித்தார் பத்மா. இப்பொழுதெல்லாம் பத்மா தனது பிறந்த வீட்டிற்கு அடிக்கடி செல்லவதில்லை. பத்மா தங்கை தற்போது கல்லூரிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் உள்ளார். பத்மாவிற்கு தனது தங்கையைக் கண்ணனுக்கு திருமணம் செய்து […]

Loading

சிறுகதை

கால்கள் – ராஜா செல்லமுத்து

வெப்பம் கக்கும் ஓர் உச்சிப் பொழுதில் செருப்பில்லாப் பாதங்களாேடு ஒரு சிக்னலில் வரும் போகும் வாகனங்களைத் தேடித் தேடிச் சென்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஏழைச் சிறுமி பார்கவி. அவள் பாதங்களில் பரவிய வெப்பம் அவள் உச்சந்தலை வரை பரவியதைப் படபடக்கும் அவள் விழிகளே சாட்சி சொன்னது. சர்ரென விரைந்து வந்த ஓர் உயர்தர வாகனம் அந்த சிக்னலைக் கடந்து செல்வதற்கு முன் பார்கவி எங்கெங்கும் பார்த்துக் கொண்டு ஓடினாள். சாலையில் ஊற்றிய தாரெல்லாம் வெப்பத்தில் உருகி […]

Loading